இப்படியொரு வரவேற்புரையை இதற்குமுன் கேட்டிருப்போமா தெரியவில்லை.
வழக்கமாக வரவேற்புரை, தலைமை, முன்னிலை, நன்றியுரை என்பதற்கெல்லாம் பெயருக்கு யாரையேனும் இட்டு நிரப்புவார்கள். மருத்துவர் கதிர் அழகனும் வரவேற்புரை வாசிக்கத்தான் வந்தார். ஆனால் வருக வருக என வரவேற்கிறோம் என்ற சம்பிரதாய உரைதவிர்த்து; நேரவிரயம் செய்யாமல் சிறப்புரையாற்றி இறுதியில் ஒரு வரியில் எல்லோரையும் வரவேற்று முடித்தார்.
நீட் தேர்வு குறித்த அவரது சிறப்பான பத்திரிகையாளர் சந்திப்பு காணொளி பார்த்திருப்போம். இதில் கூடுதலாக அடுத்த பத்தாண்டுகளில் கல்வி உரிமையில் பெரும் சேதாரத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் போக்கை விவரித்தார்.
பேச்சின் இடையே காமராஜர் மட்டும் வந்துபோயிருந்தால் சீமான் கூட இவ்வளவு பதட்டமாகாமல் ரசித்திருப்பார். ஆனால், பெரியார், அண்ணா என்று தொடர்ந்து.... "தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்" என்ற வரியுடன் முடிக்கும்போது கலைஞரையும் நெஞ்சிலேந்தி கதிர் அழகன் பேசினால் சீமானுக்கு நடுக்கம் வராமல் என்னசெய்யும்.
எனவே, சீமான் கடுப்பானார்; சத்தியராஜ் கட்டியணைத்தார்
No comments:
Post a Comment